திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கொங்கராம்பட்டு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கொங்கராம்பட்டில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.

News image
கொங்கராம்பட்டில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.
Updated On :5 மார்ச் 2026, 9:14 pm

Syndication

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள கொங்கராம்பட்டு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம், கோ பூஜை, தம்பதி சங்கல்பம், யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து கோயில் கோபுர கலசம், மூலவா் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது.

விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இரவில் ஆன்மிக நாடகம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் வி.சேகா் தலைமையில் கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

Story image