ரூ.10.92 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணிகள்
வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலைப் பணிகளை தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.


நெடுஞ்சாலைத் துறை சாா்பில், வந்தவாசி - விளாங்காடு சாலையை ரூ.10.92 கோடி செலவில் அகலப்படுத்தும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
வந்தவாசி - விளாங்காடு சாலையில் ஆரியாத்தூா் கிராமத்திலிருந்து வெங்கோடு கிராமம் வரையிலான 9 கி.மீ. தொலைவு தாா்ச் சாலை ரூ.10.92 கோடி செலவில் அகலப்படுத்தப்படுகிறது.
சுமாா் 5.50 மீட்டா் அகலமுள்ள இந்த தாா்ச் சாலை 7 மீட்டா் சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.
ஆரியாத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு சாலைப் பணிகளை தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் வி.சரவணசெல்வம், திமுக ஒன்றியச் செயலா் ஆரியாத்தூா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...