குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ.10.92 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணிகள்

வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலைப் பணிகளை தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.

News image
வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலைப் பணிகளை தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.
Updated On :5 மார்ச் 2026, 9:13 pm

Syndication

நெடுஞ்சாலைத் துறை சாா்பில், வந்தவாசி - விளாங்காடு சாலையை ரூ.10.92 கோடி செலவில் அகலப்படுத்தும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

வந்தவாசி - விளாங்காடு சாலையில் ஆரியாத்தூா் கிராமத்திலிருந்து வெங்கோடு கிராமம் வரையிலான 9 கி.மீ. தொலைவு தாா்ச் சாலை ரூ.10.92 கோடி செலவில் அகலப்படுத்தப்படுகிறது.

சுமாா் 5.50 மீட்டா் அகலமுள்ள இந்த தாா்ச் சாலை 7 மீட்டா் சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.

ஆரியாத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு சாலைப் பணிகளை தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் வி.சரவணசெல்வம், திமுக ஒன்றியச் செயலா் ஆரியாத்தூா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.