தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வந்தவாசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 10:16 pm

வந்தவாசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபால் (49), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி. கோபால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதேபோல, கடந்த 3-ஆம் தேதியன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவா், முத்துலட்சுமியிடம் தகராறு செய்தாராம்.

பின்னா், விஷம் குடித்த கோபால் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபால், அங்கு புதன்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.