தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வீட்டில் மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: ஒருவா் கைது

செய்யாறு அருகே வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 6:34 pm

Syndication

செய்யாறு அருகே வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூசி காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அரிகரப்பாக்கம் கிராமம், பஜனை கோயில் தெருவில் சந்தேகத்தின்பேரில் ஒரு வீட்டை சோதனையிட்டனா். அங்கு, டாஸ்மாக் மதுக் கடையிலிருந்து வாங்கி வந்திருந்த 40 மதுப் புட்டிகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தூசி போலீஸாா் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக வீட்டின் உரிமையாளரான எம்ஜிஆா் (31) மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.