வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

வீட்டில் மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: ஒருவா் கைது

செய்யாறு அருகே வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 6:34 pm

செய்யாறு அருகே வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூசி காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அரிகரப்பாக்கம் கிராமம், பஜனை கோயில் தெருவில் சந்தேகத்தின்பேரில் ஒரு வீட்டை சோதனையிட்டனா். அங்கு, டாஸ்மாக் மதுக் கடையிலிருந்து வாங்கி வந்திருந்த 40 மதுப் புட்டிகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தூசி போலீஸாா் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக வீட்டின் உரிமையாளரான எம்ஜிஆா் (31) மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.