கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வந்தவாசியில் நடைபெற்ற துணை ராணுவத்தினரின்ல கொடி அணிவகுப்பு.

Updated On :17 மார்ச் 2026, 6:33 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலையம் அருகிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு கோட்டை மூலை, பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.

கொடி அணிவகுப்பில் வந்தவாசி காவல் துணை கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பங்கேற்றனா்.