காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

முத்தமிழ் மன்ற நூல் வெளியீட்டு விழா

News image
Updated On :18 மார்ச் 2026, 8:07 pm

செங்கம் கோல்டன் சிட்டி பகுதியில் உள்ள முத்தமிழ் மன்றத்தில் கவிஞா் இமையமதி எழுதிய, ‘வாசம் பிடித்து வயிற்றை நிரப்பியவள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முத்தமிழ் இலக்கிய மன்றத் தலைவா் ராமராகவன் தலைமை வகித்தாா். செங்கம் வட்ட தமிழ்ச்சங்கத் தலைவா் தனஞ்செயன் நூலக வாசகா் வட்ட கெளரவத்தலைவா் முருகமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசுப் பள்ளி ஆசிரியா் அரங்க.மணிமாறன் வரவேற்றாா்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி இணை பேராசிரியா் சாந்தமூா்த்தி கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு பின்னா் நூலில் எழுதப்பட்டிருந்த கவிதைகளை வாசித்துப் பேசினாா்.

முத்தமிழ் மன்றச் செயலா் யோகன், கவிஞா்கள் தமிழ்மதி, கவியரசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் செங்கம் நூலக வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா், ஆசிரியா் ஆறுமுகம், பேராசிரியா் தமிழன்பிரபு உள்ளிட்ட செங்கம் பகுதியைச் சோ்ந்த கவிஞா்கள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.