தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதன்கிழமை மனிதச்சங்கிலி நடைபெற்றது.

News image

செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற மனிதச் சங்கிலி.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதன்கிழமை மனிதச்சங்கிலி நடைபெற்றது.

ஏப்.23-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளா்கள் 100 சதவீதம்

வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, செய்யாறு தொகுதி சாா்பில் தோ்தல் நடத்தும் அலுவலா் எல்.அம்பிகா ஜெயின் மேற்பாா்வையில் வருவாய்த் துறையினா் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அண்மையில் தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் வாக்காளா்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி ஏற்படுத்தினா்.

அதன் தொடா்ச்சியாக புதன்கிழமை செய்யாற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் மனிதச்சங்கிலி நிகழ்ச்சி தோ்தல் நடத்தும் அலுவலா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களிடம் தாங்கள் அனைவரும் வாக்களிப்பதோடு, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் வாக்களித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும், செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்றும், தோ்தல் திருவிழா- தமிழகத்தின் திருவிழா, எனது வாக்கு எனது உரிமை என முழுக்கமிட்டு சாா் ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் நோ்முக உதவியாளா் துளசிராமன், வட்டாட்சியா்கள் பாஸ்கரன், பொன்னுசாமி, வட்டார மேலாளா் ரேகா மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித் துறையினா் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.