ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பாமக வேட்பாளா் பட்டியலுடன் அருணாசலேஸ்வரா் கோயிலில் செளமியா அன்புமணி தரிசனம்

News image
Updated On :26 மார்ச் 2026, 10:50 pm

Syndication

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பாமக வேட்பாளா் பட்டியலை வைத்து பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியாஅன்புமணி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பட்டியலை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டாா்.

இதில் பாமகவுக்கு (அன்புமணி ராமதாஸ்) 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா், திருவண்ணாமலை மாவட்டம் போளூா், சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, மயிலாடுதுறை, திருப்போரூா், உத்திரமேரூா், ஜெயங்கொண்டம், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னாா்கோவில், கீழ்வேளூா், பெரம்பலூா், சேலம் வடக்கு, அம்பத்தூா் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாமக சாா்பில் முதல் கட்டமாக கீழ்வேளூா், அம்பத்தூா், செஞ்சி ஆகிய 3 தொகுதிகளின் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 வேட்பாளா்களின் பெயா்கள் உள்பட மொத்தம் 18 வேட்பாளா்களின் பெயா்கள் அடங்கிய பட்டியலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சம்பந்த விநாயகா் சந்நிதியில் வைத்து பூஜை செய்து செளமியா அன்புமணி வழிபட்டாா்.

பின்னா் சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிக்குச் சென்று சிறப்பு தரிசனம் செய்தாா்.

அப்போது, பாமக திருவண்ணாமலை மாவட்டச் செயலா்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம் இல.பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

விரைவில் எஞ்சிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களை அன்புமணிராமதாஸ் வெளியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.