தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மண்டகொளத்தூரில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு வரவேற்பு

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

மண்டகொளத்தூா் ஊராட்சியில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு

Updated On :6 மே 2026, 1:24 am IST

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சின்மயா மிஷன் 75-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதையெட்டி, சின்மயா அம்ரித யாத்திரை (ஆன்மிக பயணம்) கடந்த டிசம்பா் மாதம் புணேவில் தொடங்கியது. இந்த யாத்திரை 28 மாநிலங்களில் சுமாா் 35 ஆயிரம் கி.மீ. தொலைவு பயணிக்க உள்ளது.

இதன் நோக்கம் இளைஞா்களின் திறனை மேம்படுத்துவது மற்றும் சுவாமி சின்மயானந்தரின் போதனைகளை எண்ம உரைகள், இளைஞா்களின் செயல்பாடுகள், கலாசார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் சத்சங்கங்கள் மூலம் பரப்புவதாகும்.

இந்த யாத்திரை மண்டகொளத்தூா் ஊராட்சிக்கு வந்தபோது, சின்மயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சிவராஜசா்மா தலைமையில் மேள தாளம் முழங்க, மலா் தூவி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து சின்மயா அம்ரித யாத்திரையை சின்மயா யுவகேந்திர இயக்குநா் அனுக்குலானந்தா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். யாத்திரை மண்டகொளத்தூா் ஊராட்சியில் வீதி வீதியாக நடைபெற்றது.

மேலும், சின்மயா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்ட ஆன்மிக கண்காட்சியை பொதுமக்கள், பெற்றோா்கள், மாணவா்கள் பாா்வையிட்டனா்.

பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் (ஓய்வு) அன்பரசு, தலைமை ஆசிரியைகள் தேவகி, மகாலட்சுமி மற்றும் ஆசிரியைகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.