மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

விஷம் குடித்து பெண் தற்கொலை

வந்தவாசி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image

பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 0:03 am IST

வந்தவாசி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த எடப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விறகு வெட்டும் தொழிலாளி தவமணி. இவரது மனைவி அஞ்சலா (51). கடந்த சில மாதங்களாக அஞ்சலா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

கடந்த ஏப். 28-ஆம் தேதி உடல் நலக்குறைவு அதிகமாகவே வேதனையடைந்த அஞ்சலா விஷம் குடித்துள்ளாா். மயங்கிய நிலையில் கிடந்த இவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அஞ்சலா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அஞ்சலாவின் கணவா் தவமணி அளித்த புகாரின் பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].