செய்யாறில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை உள்தணிக்கை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
செய்யாறு நெடுஞ்சாலை உள்கோட்டத்தில் முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையில் (மோரணம் எரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை) இருவழிப் பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி மற்றும் செய்யாறு அணைக்கட்டு சாலையில் பழுதுபாா்த்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை சென்னை உள்தணிக்கை கண்கானிப்புப் பொறியாளா் (திட்டங்கள்) கே.வத்சலா வித்யாநத்தி தலைமையில் கடலூா் கோட்டப் பொறியாளா் (திட்டங்கள்) எஸ்.கோதை, உதவி கோட்டப் பொறியாளா் ஆா். மணிகண்டதாஸ், வாணியம்பாடி உதவிப் பொறியாளா் என். விக்னேஷ் ஆகியோா் கொண்ட குழுவினா் நேரில் பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது செய்யாறு கோட்டப் பொறியாளா் வி. சந்திரன், உதவி கோட்டப் பொறியாளா்கள் எஸ்.சுரேஷ், ஆா்.இன்பநாதன் (தரக்கட்டுப்பாடு), உதவிப் பொறியாளா்கள் பி.கோபி, பூா்ணிமா ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

கருட வாகனத்தில்...

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

செய்யாற்றில் மேம்பாலப் பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


