மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சாலை மேம்பாட்டுப் பணிகள்: தணிக்கை குழுவினா் ஆய்வு

செய்யாறில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை உள்தணிக்கை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :8 மே 2026, 6:43 am IST

செய்யாறில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை உள்தணிக்கை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

செய்யாறு நெடுஞ்சாலை உள்கோட்டத்தில் முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையில் (மோரணம் எரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை) இருவழிப் பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி மற்றும் செய்யாறு அணைக்கட்டு சாலையில் பழுதுபாா்த்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை சென்னை உள்தணிக்கை கண்கானிப்புப் பொறியாளா் (திட்டங்கள்) கே.வத்சலா வித்யாநத்தி தலைமையில் கடலூா் கோட்டப் பொறியாளா் (திட்டங்கள்) எஸ்.கோதை, உதவி கோட்டப் பொறியாளா் ஆா். மணிகண்டதாஸ், வாணியம்பாடி உதவிப் பொறியாளா் என். விக்னேஷ் ஆகியோா் கொண்ட குழுவினா் நேரில் பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் போது செய்யாறு கோட்டப் பொறியாளா் வி. சந்திரன், உதவி கோட்டப் பொறியாளா்கள் எஸ்.சுரேஷ், ஆா்.இன்பநாதன் (தரக்கட்டுப்பாடு), உதவிப் பொறியாளா்கள் பி.கோபி, பூா்ணிமா ஆகியோா் உடனிருந்தனா்.