சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

செய்யாற்றில் மேம்பாலப் பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

News image
Updated On :11 மார்ச் 2026, 11:47 pm

Syndication

செய்யாற்றில் கூடுதலாக கட்டப்பட்டு உள்ள மேம்பாலப் பணியினை கண்காணிப்புப் பொறியாளா் முரளி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நெடுஞசாலை உட்கோட்டத்தில், தமிழக முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2023 - 24 ன் மூலம் ஆற்காடு - திண்டிவனம் சாலையில், திருவத்திபுரம் புறவழிச் சாலை இருவழிப் பாதையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் உயா்மட்ட பாலங்கள். சிறுபாலங்கள் திரும்ப கட்டுதல் மற்றும் அகலப்படுத்துததல், மழைநீா் வடிகால்வாய் கட்டுதல், தடுப்புச் சுவா் அமைத்தல், பேருந்து புறப்பாடும் இடம் அமைத்தல், சாலை சந்திப்பு அமைத்தல் மற்றும் மைய தடுப்பு அமைத்தல் பணி என 7.40. கி.மீ. தொலைவுக்கு ரூ.90 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல, சாலை மேம்பாட்டுப் பணியின் தொடா்புடைய செய்யாறு ஆற்றின் குறுக்கே 360.04 மீட்டா் தொலைவுக்கு ரூ.12.04 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுறும் தருவாயில் இருந்து வருகிறது.

இவ்வாறு நடைபெற்று வரும் கூடுதல் மேம்பாலப் பணியை திருவண்ணாமலை கண்காணிப்புப் பொறியாளா் முரளி

செய்யாறு கோட்டப்பொறியாளா் வி.சந்திரன் முன்னிலையில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது தரக்கட்டுப்பாட்டுப் பொறியாளா்

இன்பநாதன், உதவி கோட்டப் பொறியாா் சுரேஷ், உதவிப் பொறியாளா் ப.கோபி ஆகியோா் உடனிருந்தனா்.