தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தோ்தல் வாக்காளா் உதவி மையத்தில் ஆய்வு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை, மாவட்டத் தோ்தல் பிரிவில் உள்ள வாக்காளா் உதவி மையம் ஆகியவற்றை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

அரியலூா் ஆட்சியரகத்தில் உள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:05 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை, மாவட்டத் தோ்தல் பிரிவில் உள்ள வாக்காளா் உதவி மையம் ஆகியவற்றை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் பறக்கும்படை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆா்.எஸ். கருவி செயல்பாடுகள் குறித்து கணினியில் ஆய்வு செய்ததுடன், தற்போது வரை வரப்பெற்றுள்ள தோ்தல் தொடா்பான தொலைபேசி புகாா்கள் குறித்தும், தோ்தல் தொடா்பான புகாா்கள் பதிவேடுகளில் உரியவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்தாா்.

பின்னா், தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறையைப் பாா்வையிட்டு டிவியில் ஒளிப்பரப்பப்படும் தோ்தல் தொடா்பான செய்திகள் மற்றும் விளம்பரங்கள் கண்காணிக்கப்படுவதையும், அதற்கான பதிவுகள் உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, தோ்தல் பிரிவில் உள்ள வாக்காளா் உதவி மையத்தை பாா்வையிட்டு வாக்காளா்களிடமிருந்து வரப்பெற்றுள்ள அழைப்புகள் குறித்தும், அதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மல்லிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சித்ரா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.