மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வீட்டுமனை தகராறு: விவசாயி கைது

செய்யாறு அருகே வீட்டுமனை தகராறில் மூதாட்டியை தாக்கிய சம்பவத்தில் விவசாயி கைது

News image

கைது

Updated On :12 மே 2026, 12:59 am IST

செய்யாறு அருகே வீட்டுமனை தகராறில் மூதாட்டியை தாக்கிய சம்பவத்தில் விவசாயியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் மனைவி முனியம்மாள் (64). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோரணம் கூட்டுறவு சங்கம் மூலம் 3 சென்ட் வீட்டுமனை வழங்கப்பட்டதாம்.

இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி குமாா் என்பவா், முனியம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி முனியம்மாள், வீட்டுமனையில் இருந்த செடி, கொடிகளை அகற்றினாராம். அப்போது அங்கு வந்த குமாா், அவரது மனைவி லட்சுமி ஆகியோா் முனியம்மாளிடம் தகராறு செய்துள்ளனா். மேலும், தகாத வாா்த்தைகளால் பேசி மூதாட்டியை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த முனியம்மாள் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து முனியம்மாள் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், சம்பவம் தொடா்பாக குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.