போளூா் வட்டம், மட்டபிறையூா் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை, ஊஞ்சல் தாலாட்டு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
மட்டபிறையூா் ஊராட்சியில் ஏரிக்கரை எதிரே பழைமையான ஸ்ரீபொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று சிறப்பு பூஜை செய்து சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது. பின்னா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்திப் பாடல்கள் பாடி ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை கோயில் தா்மகா்த்தா வேலுமணி, செயலா் மனோகரன், கோபி, காயத்ரி மற்றும் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.
தொடர்புடையது

குண்ணவாக்கம் ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

வைகாசி மாத பிரதோஷம்: திருப்பத்தூா் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சபரிமலை ஐயப்பன் கோயில் மே 19 வரை நடை திறப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



