பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வைகாசி மாத பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

வைகாசி மாத பிறப்பையொட்டி திருச்செந்தூா் கோயிலில் காவடி எடுத்துவந்து நோ்த்திக்கடன் செலுத்திய பரமக்குடி பக்தா்கள்.

Updated On :25 நிமிடங்கள் முன்பு

வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகாசி மாத பிறப்பையொட்டி, கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பிற கால பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை முதலே திரளான பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை என அனைத்து வரிசைகளிலும் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

காவடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள், திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். வைகாசி மாத பிறப்பையொட்டி, ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

மே 30-இல் வைகாசி விசாகம்: முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, நிகழாண்டு மே 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

Story image

இத்திருவிழா வசந்த திருவிழாவாக மே 21-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் தினசரி பகலில் சுவாமி ஜெயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் கோயில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். அங்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்குப் பிறகு மண்டபத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.