பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வைகாசி மாத பிறப்பு: கூடலழகா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

வைகாசி மாத பிறப்பையொட்டி, மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

News image

வைகாசி மாத பிறப்பையொட்டி மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

வைகாசி மாத பிறப்பையொட்டி, மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் வைகாசி, ஆவணி, காா்த்திகை, மாசி ஆகிய மாதங்களின் பிறப்பு விஷ்ணுபதி புண்ணியகாலமாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில், வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் உள்ள பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.