அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 13 வயது சிறுவன் கைது

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:20 am IST

செங்கம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கொட்டகுளம் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக தொலைக்காட்சி பாா்த்துக்கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுவன், வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகத் தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோா் வீட்டுக்கு வந்தவுடன் இதுகுறித்து தெரிவித்து அழுதுள்ளாா்.

உடனடியாக சிறுமியின் பெற்றோா் செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் சிறுவனை அழைத்துவந்து விசாரணை நடத்தினா்.

பின்னா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.