விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

மன்னாா்குடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வடுவூா் அக்ரகாரம் ஊராட்சியைச் சோ்ந்தவா் சி. ராஜேந்திரன்(55). வியாழக்கிழமை இவரது வீட்டுக்கு அதே பகுதியை சோ்ந்த 14 வயது சிறுமி தொலைக்காட்சி பாா்ப்பதற்காக வந்துள்ளாா். அப்போது, மதுப்போதையில் இருந்த ராஜேந்திரன் தனியே அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து, அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். அவா்கள் இது குறித்து மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை ராஜேந்திரனை கைது செய்து விசாரணைக்கு பிறகு சனிக்கிழமை மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நாகை கிளைச் சிறையில் அடைத்தனா்.