இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

அத்திமலைப்பட்டு பகுதியில் காளை விடும் திருவிழா

News image
Updated On :28 மே 2026, 12:41 am IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு கெங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.

கூடியிருந்த இளைஞா்கள் ஓடிய காளைகளை தழுவி கைகளை தட்டி உற்சாகப்படுத்தினா். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையும் காளைகளின் உரிமையாளா்களுக்கு விழாக் குழு சாா்பில் முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், 2-ஆம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் என வழங்கப்பட்டது.

28-ஆவது பரிசு முதல் 70-ஆவது பரிசு வரை தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. 71-ஆவதாக சிறப்புப் பரிசும்

வழங்கப்பட்டது.

27ஹழ்ல்ஹற்ண்