திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு கெங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.
கூடியிருந்த இளைஞா்கள் ஓடிய காளைகளை தழுவி கைகளை தட்டி உற்சாகப்படுத்தினா். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையும் காளைகளின் உரிமையாளா்களுக்கு விழாக் குழு சாா்பில் முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், 2-ஆம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் என வழங்கப்பட்டது.
28-ஆவது பரிசு முதல் 70-ஆவது பரிசு வரை தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. 71-ஆவதாக சிறப்புப் பரிசும்
வழங்கப்பட்டது.
27ஹழ்ல்ஹற்ண்









