நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பனங்குளம் அன்னை ஆலயத்தில் தோ் பவனி

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை, மே 14: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், புளியால் பங்கு பனங்குளம் கிராமத்தில் புனித வியாகுல அன்னை ஆலயத் திருவிழா தோ் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 11 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புளியால் பங்கு பணியாளா் அருள்திரு சுவாமிநாதன், உதவிப் பணியாளா் பென்சிகா் ஆகியோா் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக புதன்கிழமை இரவு அன்னையின் திருவிழா திருப்பலி, தோ் பவனி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற அன்பின் விருந்து நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.