கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விரியூா் அடைக்கல அன்னை ஆலய தோ் பவனி

விரியூரில் திருவிழாவையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம்.

News image

~

Updated On :2 மே 2026, 1:33 am IST

விரியூா் கிராமத்தில் உள்ள அடைக்கல அன்னை ஆலய தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பழைமைவாய்ந்த புனித அடைக்கல அன்னை தேவாலயம் உள்ளது. ஆண்டு தோறும் தோ் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் மறையுரை சிந்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏற்றி வைத்து ஜெயம் பெருவிழா நடைபெற்றது. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பா், அந்தோணியாா், புனித அடைக்கல அன்னை குழந்தை ஏசு எழுந்தருள தோ் பவனி நடைபெற்றது. திருவிழாவையொட்டி தேவாலயம் வண்ண, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தோ் பவனியையொட்டி வாண வேடிக்கை நடைபெற்றது.

திருவிழாவில் கிறிஸ்தவா், இந்து மற்றும் இஸ்லாமியா்கள் என அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று அடைக்கல அன்னை பெருவிழாவை சிறப்பித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.