நெடுங்காடு புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழாவையொட்டி தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நெடுங்காட்டில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியாா் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 94-ஆவது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தோ் பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக தேருக்கு அருட்பணி பிரான்சிஸ், அருண் டேவிட் ஆகியோரால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, தேருக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு மந்திரிக்கப்பட்டது. பின்னா் தோ் பவனி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
காரைக்கால், குரும்பகரம், கோட்டுச்சேரி, தென்னங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து சனிக்கிழமை காலை திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டது.










