கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :30 மே 2026, 12:31 am IST

திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (30). இவா், கடந்த 5.4.2026 அன்று சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக திருவண்ணாமலை கிராமிய அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை நீதிபதி, ரமேஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

29ஹழ்ல்ழ்ஹம்