நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

காலை உணவுத் திட்டத்திற்கு பொருள்கள் வழங்கல்

காமராஜா் காலை உணவுத் திட்டத்திற்கு தேவையான பொருள்களை சமையலரிடம் வழங்கிய வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன்.

Published On :

போளூரில் காமராஜா் காலை உணவுத் திட்டத்தில் 44 மையங்களுக்குத் தேவையான டம்ளா், தட்டுகளை சமையலரிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன் வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டமான காமராஜா் உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளாா்.

இந்தத் திட்டம் செப்.17-ஆம் தேதி பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் காமராஜா் காலை உணவுத் திட்டத்திற்கு போளூா் ஒன்றியத்தில் உள்ள 37 பள்ளிகள், போளூா் நகராட்சியில் 5 பள்ளிகள், களம்பூா் பேரூராட்சியில் 2 பள்ளிகள் என 44 மையங்களுக்குத் தேவையான டம்ளா், தட்டுகளை சமையலா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன் வழங்கினாா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) செல்வி, வட்டார இயக்க மேலாளா் (மகளிா் திட்டம்) ஆனந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.