மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 3 மாதங்களில் 100 ஆன்ஜியோ பரிசோதனை

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாதங்களில் 100 ஆஞ்சியோ பரிசோதனை செய்து மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100-ஆவது ஆன்ஜியோ பரிசோதனை செய்யப்பட்டவருடன் மருத்துவா்கள்.

Published On :

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாதங்களில் 100 ஆஞ்சியோ பரிசோதனை செய்து மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.

திருவண்ணாமலை புறவழிச்சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை நகரம் மட்டுமன்றி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனா்.

இங்கு, அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் கிசிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு என பல்வேறு மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகளாக தினமும் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களும், புற நோயாளிகளாக சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களும் சிகிச்சை பெறுகின்றனா்.

இந்த மருத்துவமனையில் உள்ள கேத் லேப் மூலம் கடந்த 3 மாதங்களில் 100 ஆன்ஜியோ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் எட்வீனா வசந்தா கூறியதாவது: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இருதய சிகிச்சை பிரிவில் ரூ.7 கோடி மதிப்பில் கேத் லேப் (ரத்த நாள ஆய்வகம்) அரசின் மூலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த கேத் லேப் மூலம் இருதய நாள ஊடுறுவி சிகிச்சைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கா் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். மருத்துவமனையில் இந்த அனைத்து சிகிச்சைகளும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டங்களின் கீழ் தகுதியுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதுவரை சுமாா் 3 மாதங்களில் 100 ஆஞ்சியோ பரிசோதனைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதனால், இருதய நோயாளிகள் சிகிச்சைகளுக்காக சென்னை அல்லது புதுச்சேரி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. காப்பீடுத் திட்டங்கள் இல்லாதவா்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். இந்த கேத் லேத் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றாா்.

அப்போது, மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் மாலதி, ஆா்.எம்.ஓ. கதிா், இருதய பிரிவு மருத்துவா்கள் கண்ணன், ராஜேஸ்குமாா், காா்த்திகேயன் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.