வாணியம்பாடியில்...
வாணியம்பாடி கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் கிருபானந்தராஜ் தலைமை வகித்தார். நகர அதிமுக செயலாளர் சதாசிவம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் நீலோபர் கபில் கலந்து கொண்டு 123 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி பேசினார். இதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல இசுலாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 728 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிகளை அமைச்சர் வழங்கினார்.
இசுலாமிய பெண்கள் கல்லூரிச் செயலாளர் அப்துல்ஹலீம், முகமது நரிநயீம், பள்ளி நிர்வாகிகள் நிசார்அகமது, மகீன், வகீத், நாசீர்ஜமால், பள்ளி முதல்வர்கள் ஷர்மிளா, அப்துல்ஹாதி, நகர வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பிரகாசம், பசூலூர் ரகுமான், ஆசீப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.