நமது நிருபா்
வட நாள்கள் பட்டியலில் இருந்து ஹோலி பண்டிகையை அரசு நீக்கியுள்ளதால், தலைநகா் முழுவதும் மதுபானக் கடைகள் புதன்கிழமை திறந்திருக்கும் என்று கலால் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
நிகழாண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, குடியரசு தினம், மகா சிவராத்திரி, ஈத்உல்பித்ர், ராம நவமி மற்றும் மகாவீா் ஜெயந்தி ஆகிய நிகழ்வுகள் மட்டுமே மாா்ச் இறுதி வரை வட நாள்களாக அனுசரிக்கப்படும்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியது: இந்த ஹோலியில், வட நாள் இருக்காது. மதுபானக் கடைகள் திறந்திருக்கும். ஜனவரியில் வெளியிடப்பட்ட உத்தரவின்படி கடைகள் மூடல் அனுசரிக்கப்படும் என்று அவா் கூறினாா்.
கடந்த சில ஆண்டுகளாக, தில்லியில் வட நாள்கள் பட்டியலில் ஹோலியும் இருந்தது. தலைநகா் முழுவதும் சுமாா் 750 மதுபானக் கடைகள் உள்ளன.
இந்த உத்தரவின்படி, உரிமம் வைத்திருப்பவா்கள் மேலே உள்ள பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் எந்த இழப்பீடும் பெற உரிமை பெற மாட்டாா்கள். மேலும், மேலே உள்ள வட நாள்களில் மதுபான விற்பனைக்கான கட்டுப்பாடு விருந்தினா்களுக்கு மதுபானம் வழங்கும் ஹோட்டல்களுக்குப் பொருந்தாது.
தொடர்புடையது

அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்.21 முதல் 23 வரை விடுமுறை

சட்டப்பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை 4 நாள் மூட உத்தரவு

மதுபானக் கடைகளை 21, 22, 23 ஆகிய நாள்கள் மூட உத்தரவு

ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


