தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மதுபானக் கடைகளை 21, 22, 23 ஆகிய நாள்கள் மூட உத்தரவு

தோ்தலையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், வரும் 21, 22, 23 மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆகிய நாள்களில் மதுபான கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு

News image

மதுபான கடை - பிரதிப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 10:40 pm

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், வரும் 21, 22, 23 மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆகிய நாள்களில் மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 2003 விதி 12 மற்றும் துணைவிதி (2) உரிம நிபந்தனைகளின்படி மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மதுபான கடைகளை அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து வரும் 21, 22, 23 ஆகிய நாள்கள் மற்றும் மே 4-இல் வாக்கு எண்ணும் நாளில் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

எனவே, மேற்படி நாளில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற கிளப்புகள், ஓட்டலுடன் கூடிய மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்குறிப்பிட்ட நாள்களில் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

இதையும் மீறி கள்ளத்தனமாக விற்பனை செய்வது கண்டறிந்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.