வீடு இடிந்து விழுந்து மூதாட்டி சாவு
திருப்பத்தூர் அருகே குடிசை வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி புதன்கிழமைஇறந்தார்.


திருப்பத்தூர் அருகே குடிசை வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி புதன்கிழமை
இறந்தார்.
திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டாள் (80). இவர், குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாள்களாக கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்டாள் மீது வீடு இடிந்து விழுந்தது. இதனால் ஆண்டாள் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த கந்திலி போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...