தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எல்பிஜி: ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா? யாருக்கு? - மத்திய அரசு விளக்கம்!

சமையல் எரிவாயு நுகர்வோர், கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்புக்கு மத்திய அரசு விளக்கம்...

News image
கோப்புப் படம்- IANS
Updated On :17 மார்ச் 2026, 8:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு(கேஒய்சி) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமல்ல என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி சமையல் எரிவாயு நுகர்வோர், தொடர்ந்து சிலிண்டர்களைப் பெற பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சமையல் எரிவாயு நுகர்வோர் அனைவரும் உடனடியாக கேஒய்சி எனும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்பது போன்ற பல தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

"இந்த ஆன்லைன் கேஒய்சி நடைமுறை புதிதானது அல்ல. நுகர்வோர்கள் தங்கள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பைச் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காகவே பதிவிடப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமல்ல , இதுவரை ஒருமுறைகூட தங்களின் ஆதார் விபரங்களைச் சரிபார்க்காத வாடிக்கையாளர்கள் மட்டுமே இதைச் செய்தால் போதும்.

ஏற்கனவே கேஒய்சி சரிபார்ப்பு செய்துள்ள உஜ்வாலா அல்லாத சாதாரண வாடிக்கையாளர்கள் மீண்டும் இதனைச் செய்யத் தேவையில்லை.

உஜ்வாலா திட்டப் பயனாளிகள் மட்டும் மானியம் பெறுவதற்காக நிதியாண்டிற்கு ஒருமுறை இச்சரிபார்ப்பைச் செய்ய வேண்டும். அதுவும் 7 சிலிண்டர்களைப் பெற்ற பிறகு 8 ஆவது அல்லது 9 ஆவது சிலிண்டரைப் பெறும்போது சரிபார்ப்பு கட்டாயம்.

இந்த சரிபார்ப்பு நடைமுறையை வீட்டிலிருந்தே இலவசமாகச் செய்துகொள்ள முடியும். இதனால் சிலிண்டர் விநியோகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

சமையல் எரிவாயு சிலிண்டரை முறைகேடாக பயன்படுத்துவோரைக் கண்டறியவும் எரிவாயு முறைகேடுகளைத் தவிர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.