பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எல்பிஜி: ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா? யாருக்கு? - மத்திய அரசு விளக்கம்!

சமையல் எரிவாயு நுகர்வோர், கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்புக்கு மத்திய அரசு விளக்கம்...

News image

கோப்புப் படம்

IANS

Updated On :17 மார்ச் 2026, 8:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு(கேஒய்சி) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமல்ல என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி சமையல் எரிவாயு நுகர்வோர், தொடர்ந்து சிலிண்டர்களைப் பெற பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சமையல் எரிவாயு நுகர்வோர் அனைவரும் உடனடியாக கேஒய்சி எனும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்பது போன்ற பல தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

"இந்த ஆன்லைன் கேஒய்சி நடைமுறை புதிதானது அல்ல. நுகர்வோர்கள் தங்கள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பைச் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காகவே பதிவிடப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமல்ல , இதுவரை ஒருமுறைகூட தங்களின் ஆதார் விபரங்களைச் சரிபார்க்காத வாடிக்கையாளர்கள் மட்டுமே இதைச் செய்தால் போதும்.

ஏற்கனவே கேஒய்சி சரிபார்ப்பு செய்துள்ள உஜ்வாலா அல்லாத சாதாரண வாடிக்கையாளர்கள் மீண்டும் இதனைச் செய்யத் தேவையில்லை.

உஜ்வாலா திட்டப் பயனாளிகள் மட்டும் மானியம் பெறுவதற்காக நிதியாண்டிற்கு ஒருமுறை இச்சரிபார்ப்பைச் செய்ய வேண்டும். அதுவும் 7 சிலிண்டர்களைப் பெற்ற பிறகு 8 ஆவது அல்லது 9 ஆவது சிலிண்டரைப் பெறும்போது சரிபார்ப்பு கட்டாயம்.

இந்த சரிபார்ப்பு நடைமுறையை வீட்டிலிருந்தே இலவசமாகச் செய்துகொள்ள முடியும். இதனால் சிலிண்டர் விநியோகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

சமையல் எரிவாயு சிலிண்டரை முறைகேடாக பயன்படுத்துவோரைக் கண்டறியவும் எரிவாயு முறைகேடுகளைத் தவிர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.