தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா என்.ஆர். காங்கிரஸ்?

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் விலகுவதாகத் தகவல்...

News image
பிரதமர் நரேந்திர மோடியுடன் புதுவை முதல்வர் ரங்கசாமி (கோப்புப்படம்)- கோப்புப் படம்
Updated On :17 மார்ச் 2026, 7:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான பேச்சுவார்த்தையை முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி புறக்கணித்துள்ளதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் கடந்த 2021 தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் தற்போது ஆட்சியில் உள்ளது.

வரும் தேர்தலிலும் பாஜகவுடன் என்.ஆர். காங்கிரஸ் இணைந்து போட்டியிட உள்ளதாகவே தகவல் வெளியானது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தின.

அதில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை ரங்கசாமி முன்வைத்ததாகவும் அதற்கான உறுதிமொழியை பாஜக தர வேண்டும் என்று கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 2021 தேர்தலைப்போலவே ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியிருந்தார்.

மேலும் புதிய கட்சிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில் இன்று காலை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த என்.ஆர். காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. தனியார் விடுதியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா காத்திருந்தார். ஆனால், முதல்வர் ரங்கசாமி இந்த பேச்சுவார்த்தையைப் புறக்கணித்துள்ளார். இதனால் பாஜகவினர் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து திரும்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுபற்றி பேசுவதற்கு தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும், என்டிஏ கூட்டணியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவரால் புதிதாகத் தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சி இணையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் அதற்கு ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றாததாலும் தற்போதைய ஆட்சியில் ரங்கசாமிக்கு தெரியாமலேயே 3 பாஜக நியமன எம்எல்ஏக்களை நியமித்தது, ஆளுநர் மூலமாக பல்வேறு அழுத்தங்கள் கொடுத்தது ஆகியவற்றாலும் ரங்கசாமி அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் தவெகவுடன் என்.ஆர். காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.

இதனிடையே புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நேற்று(மார்ச் 16) தொடங்கிய நிலையில் நேற்று யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. புதுச்சேரிக்கு வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.