ஆம்பூர் அருகே கைலாசகிரி மலையில் மலைப்பாம்பு தென்பட்டதால் அப்பகுதிக்குச் சென்று வருவோர் பாதுகாப்புடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் அருகே உள்ளது கைலாசகிரி மலை. இந்த மலையின் மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
பக்தர்கள் மலைமேல் நடந்து செல்வதற்காக சுமார் 1,200 படிக்கெட்டுகள் உள்ள பாதை வழியும், வாகனங்களில் மலைமேல் செல்ல சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் செல்வதற்கான மலைப்பாதை அமைக்கும் பணி நிறைவடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, கார்த்திகை தீபம், தைப்பூசம் போன்ற விசேஷ நாள்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைமேல் உள்ள புண்ணிய தீர்த்தக் குளத்தில் நீராடி, கோயிலில் வழிபட்டு வருகின்றனர்.
இது தவிர பிரதி மாத கிருத்திகை தினங்களிலும், பண்டிகை நாள்களிலும் மலை மேல் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் சென்று
வழிபட்டு வருகின்றனர்.
மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர், கால்நடை மேய்ப்போர் என எப்போதும் கைலாசகிரி மலையில்
மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாள்களாக மலைப்பாதை பகுதியிலும், படிக்கெட்டு பகுதியிலும் பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதாக வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
வனவர் கருணாமூர்த்தி, வனக்காப்பாளர் காந்தராஜ் மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற பகுதியை செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இப்பகுதியில் உள்ள மலைப்பாம்பு பெரியதாக இருக்கும் எனத் தெரியவருகிறது. எனவே காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர், கால்நடை மேய்ப்போர் பாதுகாப்பாக சென்று வர வேண்டுமென எச்சரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

முடிவுக்கு வந்தது தந்தை-மகன் மோதல்! அன்புமணியை ஆரத்தழுவி வரவேற்ற ராமதாஸ்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


