லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  

Updated On :9 ஏப்ரல் 2018, 11:08 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் தொழிற்சாலை, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆம்பூர் புறவழிச் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.ஞானதாஸ் தலைமை வகித்தார்.  
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென புறவழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், சமத்துவ மக்கள் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.