2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஏலகிரியில் விவசாயி வீட்டை சூறையாடிய ஒற்றை யானை

திருப்பத்தூரை அடுத்த ஏலகிரி மலை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை  ஆண் யானை விவசாயியின் வீட்டை சூறையாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:20 pm

DIN

திருப்பத்தூரை அடுத்த ஏலகிரி மலை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை  ஆண் யானை விவசாயியின் வீட்டை சூறையாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே சுற்றுலா மையமான ஏலகிரி மலையில் மங்களம், நிலாவூர் கூட்டுச் சாலை ஆகிய மலைக் கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ஒற்றை ஆண் யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, திருப்பத்தூர் வனத் துறையினர் அங்கு முகாமிட்டு ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வனப்பகுதிகளிலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டுமென தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்து வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மங்களம் செல்லும் வழியில் மொப்பவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமனுக்குச் (55) சொந்தமான இரும்புக் கூரையால் வேயப்பட்ட மண் வீட்டையும், அங்குள்ள விவசாய நிலங்களையும் யானை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. அப்போது  ஜெயராமன் மற்றும் அவரது மனைவி மைலா ஆகியோர் அருகில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கியிருந்ததால் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வனத் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். யானை தாக்குதல் குறித்து வனத் துறையினர் கூறுகையில், ஜவ்வாது மலை காப்புக் காட்டில் இருந்து வழிதவறி வந்த ஒற்றை யானை, ஞாயிற்றுக்கிழமை இரவு  தானாகவே ஏலகிரி மலை காப்புக் காட்டை விட்டுச் சென்று விட்டது. 
இனிமேல் ஏலகிரி மலைப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் எனத் தகவல் தெரிவித்தனர்..
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.