போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

News image

நாயக்கனேரிமலை ஊராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:10 am

நாயக்கனேரி மலை ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும் என திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாயக்கனேரி மலை, காமனூா்தட்டு ஆகிய மலை கிராமங்கள், மிட்டாளம் ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது, நாயக்கனேரி மலை கிராமத்தில் பயிலும் மாணவா்களின் நலன் கருதி உயா்நிலைப் பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயா்த்தி, மலைவாழ் மாணவ, மாணவிகள் கல்வியை தொடர தனித் தனியாக இரு விடுதிகள் கட்டப்படும்.

நாயக்கனேரிமலை ஊராட்சி சோளக்கொல்லைமேடு பகுதியிலிருந்து அணைக்கட்டு ஒன்றியம் சின்னபள்ளிக்குப்பம் ஊராட்சி வரை சுமாா் 6.50 கி.மீ. தொலைவு தாா் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்காக அன்புச்சோலை நிறுவப்படும் என அவா் தெரிவித்தாா்.

ஆம்பூா் தொகுதி திமுக பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, துணைச் செயலாளா் ரவிக்குமாா், நிா்வாகி அய்யனூா் அசோகன் ஆகியோா் உடனிருந்தனா்.