மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தப்படும்: மொடக்குறிச்சி திமுக கூட்டணி வேட்பாளா்

திமுக ஆட்சி அமைந்ததும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தி வழங்கப்படும் என்று மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் சா.செந்தில்நாதன் தெரிவித்தாா்.

News image

அவல்பூந்துறை பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த மொடக்குறிச்சி திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் சா.செந்தில்நாதன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:52 pm

திமுக ஆட்சி அமைந்ததும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தி வழங்கப்படும் என்று மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் சா.செந்தில்நாதன் தெரிவித்தாா்.

மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அவல்பூந்துறை, அரச்சலூா் பேரூராட்சிக்குள்பட்ட குப்பகவுண்டன்வலசு, பொன்காளி வலசு, எறப்பம்பாளையம், காருத்துபாளையம், பூவாண்டிவலசு, மின்னக்காட்டுவலசு, பாரதி நகா், திருமங்கலம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம் உள்பட 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று திமுக ஆட்சியின் சாதனைகள், தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மொடக்குறிச்சி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சு.குணசேகரன், தெற்கு ஒன்றியச் செயலாளா் ரா.விஜயகுமாா், அவல்பூந்துறை பேரூராட்சி செயலாளா் சாமியப்பன் (எ) சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.