தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சாலை மறியல்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கைது

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:22 pm

DIN

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஊரக செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், தேர்தல் நேரங்களில் ஆய்வுக் கூடம், விடுமுறை நாள்களில் களப்பணி செய்வதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 6-ஆம் நாளான திங்கள்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோசப் கென்னடி, மாநிலச் செயலர் பாரி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கோஷங்கள் எழுப்பியடி தடையை மீறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.