வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஊரக செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், தேர்தல் நேரங்களில் ஆய்வுக் கூடம், விடுமுறை நாள்களில் களப்பணி செய்வதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 6-ஆம் நாளான திங்கள்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோசப் கென்னடி, மாநிலச் செயலர் பாரி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கோஷங்கள் எழுப்பியடி தடையை மீறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறையால் நிரந்தரமாக ஆட்சியை கைபெற்றுவதற்கு முயற்சி: பழ. நெடுமாறன்
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

