மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசு மதுக் கடை சுவரில் துளையிட்டு பணம் திருட்டு

வாணியம்பாடியில் அரசு மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு, ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On :9 ஜூலை 2018, 12:02 am

வாணியம்பாடியில் அரசு மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு, ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் ஏரிகரை அருகே தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடத்தில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இங்கு விற்பனையாளர்களாக  விநாயகம், மேகநாதன் ஆகிய இருவரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் இருவரும் கடையைப் பூட்டிச் சென்றனர்.  இதையடுத்து மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே இருந்த ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மட்டும் திருடிச் சென்றனர். விற்பனையாளர்கள் சனிக்கிழமை காலை கடையைத் திறந்தபோது பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சனிக்கிழமை இரவு வரை புகார் எதுவும் தரப்படாததால் வழக்குப் பதிவு 
செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.