இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவர் கைது

காட்பாடி அருகே திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :9 ஜூலை 2018, 12:01 am

காட்பாடி அருகே திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
காட்பாடி அருகே விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் சீனிவாசன். இவரிடம் அஜீத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அஜீத்தை அதே பகுதியை சேர்ந்த சுனில்குமார் என்பவர் தகராறின்போது தாக்கியுள்ளார். இதனை சீனிவாசன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுனில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் சேர்ந்து சீனிவாசனை அண்மையில் ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் தாக்கினர். 
அதில் பலத்த காயமடைந்த சீனிவாசன், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். 
மகேஷ் என்பவர் ஆரணி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், விருதம்பட்டு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், விருதம்பட்டு பாலாற்றுப் பகுதியில் பதுங்கியிருந்த சுனில்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.