தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

போக்குவரத்து எஸ்.ஐ.க்கு பாராட்டு

ஆம்பூர் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரின் பணியைப் பாராட்டி அவர் கௌரவிக்கப்பட்டார்.

Updated On :9 ஜூலை 2018, 12:07 am

ஆம்பூர் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரின் பணியைப் பாராட்டி அவர் கௌரவிக்கப்பட்டார்.
ஆம்பூர் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவர் ரமேஷ். இவர், ஆம்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிக அளவில் ஏற்படும் பகுதியான தேசிய நெடுஞ்சாலை-புறவழிச் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 
வாகன ஓட்டிகளிடம் கனிவாக நடந்து கொண்டு, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி, தனது பணியை சிறப்பாகச் செய்து வரும் உதவி ஆய்வாளர் ரமேஷை ஆம்பூர் நகர மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் வி.ஆர். நசீர் அஹமத் தலைமையில் அக்கட்சியினர் வியாழக்கிழமை அவரை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தனர். நிர்வாகிகள் தப்ரேஸ் அஹமத், அல்லாஹ் பகஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.