40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதே கல்வியின் முக்கிய நோக்கமாகும்: மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் பேச்சு

கல்வியின் முக்கிய நோக்கம் ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதேயாகும் என மத்திய மனித வள மேம்பாடு, நீர்வளத் துறை இணை அமைச்சர் சத்யபால்சிங் தெரிவித்தார்.

Updated On :24 ஜூலை 2018, 12:35 am IST

கல்வியின் முக்கிய நோக்கம் ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதேயாகும் என மத்திய மனித வள மேம்பாடு, நீர்வளத் துறை இணை அமைச்சர் சத்யபால்சிங் தெரிவித்தார்.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில், வித்யா நேத்ரம் திட்டத்தின் கீழ், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய மனித வள மேம்பாடு, நீர்வளத்துறை இணை அமைச்சர் சத்யபால்சிங் பங்கேற்று, 600 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் உதவித் தொகைக்கான காசோலையை வழங்கிப் பேசியதாவது: 
ஒரு குழந்தையின் தேவை தாய்க்குத் தெரியும். இங்கு பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்வதால் சக்தி அம்மாவும் ஒரு தாய்தான். வாழ்க்கையில் சாதிக்க ஆங்கிலம் முக்கியமல்ல. முதலில் தாய்மொழியைக் கற்க வேண்டும். இங்குள்ள மாணவ, மாணவிகள் முதலில் தமிழை முழுமையாக கற்க வேண்டும். கல்வியின் முக்கிய நோக்கமே ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதுதான். இந்தியாவில் 1100க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எந்தக் குழந்தையும் கல்வி கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைத்து பெற்றோரும், பிள்ளைகளும் நமக்கான திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, நாராயணி பீடத்தின் பீடாதிபதி சக்தி அம்மா தலைமை வகித்துப் பேசியதாவது:
பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் எனக் கேட்டால், நல்ல வேலைக்குச் சென்று மற்றவர்களுக்கு நல்லது செய்வேன் என சப்தமாக கூறுவர். ஆனால், வேலைக்குச் சென்றதும் அந்த சப்தம் குறைந்துவிடும். அதிகப்படியான கல்விக்கடன் கட்ட வேண்டும், திருமணம், வேலை என ஏராளமான கடமைகள் வந்துவிடுவதே இதற்குக் காரணம். இந்த கடமைகளை வெற்றிகரமாக செய்வதற்கு இயற்கையாகவே சக்தி கிடைக்கிறது. அதேபோல், நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதை கடமையாக நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வித தடங்கலும் இல்லாமல் நாம் நன்மைகளை செய்திட முடியும். நமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, சமுதாயத்துக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக முடியாது. காரணம், மனிதனுக்குப் போதும் என்ற எண்ணம் எப்போதும் தோன்றாது. எனவே, மற்றவர்களுக்கு நன்மை செய்வதை நாம் கடமையாக ஏற்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் முன்னிலை வகித்தார். நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, நாராயணி பீடம் இயக்குநர் சுரேஷ்பாபு, அறங்காவலர் சௌந்திரராஜன், மேலாளர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.