ஆம்பூர் அருகே இரு சக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (40). இவர், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த மாதம் திருடு போனது. இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆம்பூர் புறவழிச் சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரை போலீஸார் நிறுத்தி விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். அவர்களிடம் போலீஸார் மேலும் நடத்திய விசாரணையில், அவர்கள் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (25), ராகுல் (30) என்பதும், அவர்கள் குமரவேலின் இரு சக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. அதன்பேரில், போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை!
தமிழ்நாடு தேர்தல்! 2021 பேரவைத் தேர்தல் கணிப்புகள் துல்லியமாக இருந்ததா?

பொதுத்துறை நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சி தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

