மாம்பாக்கம் கிராமத்தில் எட்டி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி எருது ஆட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆற்காட்டை அடுத்த கலவை அருகே மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள எட்டி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பாரம்பரியமாக நடத்தப்படும் எருது ஆட்டம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, ஊர் பொதுமக்கள் எட்டியம்மன் கோயில் முன் பொங்கலிட்டு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சுவாமியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் எருது ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. அப்போது, சீறிப் பாய்ந்த காளைகளால் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த எருது ஆட்டம் நிகழ்ச்சியைக் காண சொரையூர், மேலப்பந்தை, அக்கூர், குப்படிசாத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நஸ்லனின் மாலிவுட் டைம்ஸ் டீசர்!

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


