வாணியம்பாடி அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
வாணியம்பாடியை அடுத்த ஒடப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ராமகிருஷ்ணன் (35). இவர், ஈச்சங்கால் கிராமத்தைச் சேர்ந்த நந்தன் (34) என்பவரின் வீட்டின் அருகே உள்ள இடத்துக்குச் சென்று அடிக்கடி மது அருந்துவாராம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ராமகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் நந்தன் வீடருகே சென்றபோது இருவருக்கும் இடையே ஏற்பட்டு தகராறில் நந்தன் வீட்டிலிருந்த கத்தியால் ராமகிருஷ்ணனை வெட்டினார். இதில் பலத்த காயமைடந்த ராமகிருஷ்ணன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நந்தனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
