வாணியம்பாடி அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
வாணியம்பாடியை அடுத்த ஒடப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ராமகிருஷ்ணன் (35). இவர், ஈச்சங்கால் கிராமத்தைச் சேர்ந்த நந்தன் (34) என்பவரின் வீட்டின் அருகே உள்ள இடத்துக்குச் சென்று அடிக்கடி மது அருந்துவாராம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ராமகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் நந்தன் வீடருகே சென்றபோது இருவருக்கும் இடையே ஏற்பட்டு தகராறில் நந்தன் வீட்டிலிருந்த கத்தியால் ராமகிருஷ்ணனை வெட்டினார். இதில் பலத்த காயமைடந்த ராமகிருஷ்ணன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நந்தனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


