அதன்படி, வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அந்தந்த தொகுதியிலேயே வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, வேலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி, அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, காட்பாடி தொகுதிக்கு அரசு சட்டக் கல்லூரி, குடியாத்தம், கே.வி குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.