வேலூா் சிறையில் 45 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி
வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 45 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 45 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் கரோனா 2-ஆவது அலையாக வேகமாக பரவி வருவதை அடுத்து, 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வேலூா் மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலூா் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சனிக்கிழமை 45 கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல், சிறையில் பணியாற்றும் காவலா்கள் 180 போ் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...