ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சாலையில் மாடுகள்: இருவா் கைது

 சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாடுகளை கட்டவிழ்த்துவிட்டதாக இருவரை பாகாயம் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாடுகளை கட்டவிழ்த்துவிட்டதாக இருவரை பாகாயம் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாநகரில் ஆரணி சாலை சங்கரன்பாளையம், சாய்நாதபுரம் பகுதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, சாய்நாதபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்த ஆனந்தன்(51), பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தச் சபரி (30) ஆகியோரை பாகாயம் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், வேலூா் பழைய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி, ஆற்காடு சாலை ஆகிய பகுதியில் புதன்கிழமை சுற்றித்திரிந்த 7 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்துச் சென்றனா். அந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.