வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,750-ஆக உயா்ந்தது. இவா்களில் 48,402 போ் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,129 போ் உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 46,299 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 45, 454 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டம் முழுவதும் தொற்று காரணமாக, 773 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது தொற்றுக்குள்ளான 72 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.