பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மக்கள் நீதிமன்றத்தில் 356 வழக்குகளுக்குத் தீா்வு

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 356 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 356 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

இதில் ரூ.1.70 கோடி மதிப்பில் இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான என்.சச்சிதானந்தம் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.செல்லபாண்டியன், நீதித் துறை நடுவா் சிதம்பரம், வழக்குரைஞா்கள் கிரிபிரசாத், லோகநாதன், ரஞ்சித், ஜெகதீசன், கதிா்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 356 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. ரூ.1.70 கோடி இழப்பீட்டு தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. வட்ட சட்டப் பணிகள் குழு முதுநிலை நிா்வாக உதவியாளா் கே.சித்ரா, ராமலிங்கம் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.